டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடித்த 'கத்தி' திரைப்படம் 2014ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. கடந்த வருடம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க 'கைதி நம்பர் 150' என்ற பெயரில் ரீமேக் ஆகி அங்கும் வெற்றி பெற்று வசூலைக் குவித்தது.
'கத்தி' படம் வெளிவரும் சமயத்தில் அந்தப் படத்தின் கதை ஏ.ஆர்.முருகதாஸுடையது அல்ல, என்னுடையது என மிஞ்சூர் கோபி என்பவர் சர்ச்சையைக் கிளப்பினார். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த விவகாரம் நீதிமன்றவம் வரை சென்று, பின்னர் ஒரு வழியாக ஒரு சமாதான முடிவுக்கு வந்து படம் வெளியானது.
சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் பேசி ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் இருந்து தான் 'கத்தி' படத்திற்கான இன்ஸ்பிரேஷனை எடுத்ததாகச் சொல்லியிருக்கிறார். அதில் ஒரு எம்ஜிஆர் அந்தப் பக்கம் போய்விடுவார், மற்றொரு எம்ஜிஆர் இந்தப் பக்கம் வந்துவிடுவார். பழைய படத்தைக் கொஞ்சம் மாற்றி புதிதாக எடுத்தேன். ஆனால், சிலர் தேவையில்லாமல் குற்றச்சாட்டு சொன்னார்கள். நீதிமன்றத்தில் நிரூபித்து வெற்றி பெற்றேன் எனச் சொல்லியிருக்கிறார்.
அப்படியென்றால் முருகதாஸ் இப்போது இயக்கி வரும் 'ஸ்பைடர்' படம் எந்த பழைய படத்தின் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும்.