ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தனுஷ் நடித்துள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த், தனுஷ், கஜோல் உள்ளிட்டவர்கள் தெலுங்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்து படத்தைப் பற்றி பல பேட்டிகளை அளித்தனர். அப்போது தெலுங்கு செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் பெண் நிருபர் தனுஷைப் பேட்டி கண்டார்.
அந்தப் பேட்டியின் போது அவர் சுசி லீக்ஸ் விவகாரம் மற்றும் தனுஷின் குடும்ப வாழ்க்கை பற்றி தனுஷிடம் கேள்வி கேட்டார். அதனால் கோபமடைந்த தனுஷ், மைக்கை கழட்டி எறிந்து 'ஸ்டுபிட் இன்டர்வியூ' என்று சொல்லிவிட்டு போய்விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து மீண்டும் பேட்டி கொடுத்தார். கேள்வி கேட்ட பெண் நிருபரும் மேற்கொண்டு சுசி லீக்ஸ் பற்றி எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
இந்த விவகாரம் தெலுங்கு மீடியா உலகிலும், திரையுலகிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதன் பின் டிடெல்லியில் 'வேலையில்லா பட்டதாரி 2' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ், அந்த டிவி பேட்டி குறித்து தன்னுடைய வருத்தத்தை வெளியிட்டார்.
“அது எனக்கே வேடிக்கையாக இருந்தது. நான் பொதுவாகவே அமைதியானவன். ஆனால், என்னிடம் இல்லாத குணத்தால் அன்று எதிர்மறையாக நடந்து கொண்டேன். அந்தக் கேள்விக்கு பதிலளிக்க எனக்கு விருப்பமில்லை என்பதில் தெளிவாக இருந்தேன். ஆனால், அவ்வளவு எதிர்மறையான செயல் நியாயமற்றது. உண்மையில் கடந்த இரண்டு வாரங்களாக எனது பட வேலைகளால் நான் தூங்கவேயில்லை. பேட்டி எடுத்தவரிடம் அடுத்த கேள்வியைக் கேளுங்கள் என சாதாரணமாகச் சொல்லியிருக்கலாம்” என தனுஷ் அவருடைய வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.