இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரேமம் நாயகி சாய் பல்லவி தெலுங்கில் நடித்துள்ள முதல் படம் பிடா. இந்த படமும் அவருக்கு வெற்றியாக அமைந்திருக்கிறது. அதனால் தெலுங்கில் பேசப்படும் நடிகையாகி விட்டார். அவரது நடிப்பை பத்திரிகைகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், பிடா படத்தை அடுத்து நானியுடன் எம்சிஏ மற்றும் தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் கரு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி.
பிடா படத்தில் பானுமதி என்ற கேரக்டராகவே தான் வாழ்ந்ததாக கூறியவர், ரசிகர்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதோடு, தற்போதைய நடிகைகளில் அனுஷ்கா சிறந்த நடிகை. அவரது படங்களை பார்க்கத் தொடங்கியதில் இருந்தே நான் அவரது தீவிரமான ரசிகையாகி விட்டேன் என்றும் கூறியுள்ளார் சாய் பல்லவி.