மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம் 3. அந்த படத்தில் அவரது இசையில் தனுஷ் எழுதி பாடிய ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் இந்தியா மட்டுமின்றி அயல் நாடுகளிலும் ஒலித்தது. அந்த பாடலின் வார்த்தைகள் எனக்கு புரியவில்லை ஆனால் பாடல் ரொம்ப பிடித்திருக்கிறது என்று ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனே அந்த படம் வெளியான நேரத்தில் கூறியிருந்தார்.
அதையடுத்து, வேதாளம் படத்திற்காக அனிருத்தின் இசையில் உருவான ஆளுமா டோளுமா பாடலும் அனிருத்திற்கு அடுத்த மெகா ஹிட்டாக அமைந்தது. அந்த பாடல் இந்தியாவை கடந்து பாகிஸ்தானிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறதாம். அங்குள்ள ஒரு எப்எம்மில் ஆர்.ஜேவாக இருக்கும் அட்லீல் கான் என்பவர், ஆளுமா டோளுமா பாடலின் வார்த்தைகள் புரியவில்லை. என்றாலும், பாடல் கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று டுவிட் செய்திருக்கிறார்.
அந்த டுவிட்டை தற்போது அனிருத் ரிடுவிட் செய்திருக்கிறார். அத்துடன் இசைக்கு மொழியே கிடையாது என்றும் பதிவிட்டுள்ளார் அனிருத்.