ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னை: அனைத்து விதமான ஊழல்களை பற்றி கூறாதது என் தவறு தான், நான் ஊழலுக்கு எதிரானவன் என, நடிகர் கமல், டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது என நடிகர் கமல் விமர்சித்தார். அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், டெங்கு பாதிப்பை கவனியுங்கள்; உங்களை நாங்கள் கவனிக்கிறோம் என டுவிட்டரில் பதிவு செய்தார். அடுத்தடுத்து, அவர் வெளியிட்டு வரும் கருத்து, அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அனைத்து விதமான ஊழல்களையும் கூறாதது தவறுதான் என, நேற்று, கமல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் கமல், டுவிட்டரில் கூறி இருப்பதாவது: "நான் ஊழலுக்கு எதிரானவன். எந்த கட்சிக்கும் எதிரி அல்ல. தவறு செய்யும் எல்லோருக்கும் எதிராக நான் புரட்சி செய்கிறேன். புரட்சியாளர்கள் மரணத்தை கண்டோ அல்லது தோல்வியை கண்டோ அஞ்சுவது இல்லை. என் அறிவிப்பில் பிழை இருப்ப தாக கூறுகின்றனர், உண்மை தான். எல்லா ஊழல்களை பற்றியும் கூறாத பிழை இருக்கிறது. கட்சி, நட்பு, குடும்ப பேதமின்றி அனைத்து ஊழல்களையும் தடுக்க முயல்வது என் கடமை, அது அனைவரது கடமையும் கூட.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.