'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகம் கடந்த மாதம் தியேட்டர்கள் ஸ்டிரைக்கைச் சந்தித்தது. இந்த மாதத்தில் பெப்ஸியின் ஸ்டிரைக்கைச் சந்தித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பெப்ஸி ஊழியர்களுக்கான சம்பளத்தை தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயித்தபடி மட்டுமே வழங்க வேண்டும் என்றும், அவர்கள் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் வைத்து படத்தை தயாரிக்கலாம் என்றும் முடிவெடுத்தார்கள். அதையும் மீறி பெப்ஸி சங்கத்தினர் வந்து தகராறு செய்தால் தயாரிப்பாளர் சங்கம் படப்பிடிப்புக்கு பாதுகாப்பு அளிக்கும் என்றும் அறிவித்தார்கள்.
முன்னர் நடந்த வழக்கு ஒன்றில் பெப்ஸி சங்கத்தினர் இல்லாமலும் படப்பிடிப்பை நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததையும் தயாரிப்பாளர் சங்கத்தினர் சுட்டிக் காட்டியுள்ளார்கள். தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த திடீர் முடிவால் பெப்ஸி சங்கத்தினர் கடும் கோபத்தில் உள்ளார்களாம்.
தற்போது அவர்களின் அவசரக் கூட்டம் ஒன்று நடந்து வருகிறது. அதில் தயாரிப்பாளர் சங்க முடிவுக்கு எதிராக ஸ்டிரைக் நடத்தலாமா என ஆலோசித்து வருகிறார்களாம். அதோடு, எந்த தமிழ் பட படப்பிடிப்பையும் நடத்தவிடக் கூடாது என சிலர் ஆவேசமாகப் பேசி வருகிறார்களாம். அதனால், விரைவில் தமிழ்த் திரையுலகம் மீண்டும் ஒரு ஸ்டிரைக்கை சந்திக்க வேண்டிய நிலை வர வாய்ப்புகள் அதிகம்.