டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கமல் அரசியலுக்கு வருவாரா? ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது தான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி. இதுகுறித்து கவுதமி கூறும்போது "இருவரும் யோசித்து முடிவெடுத்தால் நாட்டுக்கு நல்லது" என்கிறார். இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது:
நல்ல விஷயங்கள் இருக்கும் இடத்தில் கெட்ட விஷயங்களும் இருக்கும். தப்பு செய்கிறவர்களும், நல்லது செய்கிறவர்களும் ஒரே இடத்தில் தான் இருக்கிறார்கள். கமல் சொல்லி வரும் கருத்துக்கள் அவரது சொந்த கருத்து, அதில் யாரும் தலையிட முடியாது. கருத்து கூற அவருக்கு உரிமை உள்ளது. அவர் கருத்துக்கள் தவறு என்றும் சொல்ல மாட்டேன். யார் அரசியலில் ஈடுபட்டாலும் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. அரசியலுக்கு வருவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும், விருப்பங்கள் இருக்கும். யாரும் அரசியலுக்கு வரலாம்.
ஆனால் யார் வந்தாலும் அவர்கள் எந்த நோக்கத்தோடு வருகிறார்கள். என்ன கருத்தோடு வருகிறார்கள், என்ன பிரச்னைகளை முன்வைக்கிறார்கள், அதை எப்படி நிறைவேற்றுவார்கள் என்பதை நாட்டின் குடிமகள் என்ற முறையில் கவனிக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.
ரஜினி, கமல் இருவருமே நன்கு யோசித்து முடிவெடுத்தால் மக்கள் முன்னேற்றமும், நாட்டின் நலனும் சிறப்பாக அமையும் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு கவுதமி கூறியுள்ளார்.