தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த ஜனவரியில் வெளியான மோகன்லாலின் 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' படத்தின் தயாரிப்பளார் சோபியா பால் என்கிற பெண் தயாரிப்பாளர். இவர்தான் 'பெங்களூர் டேய்ஸ்' படத்தின் இணை தயாரிப்பாளரும் கூட. தற்போது இவர் துபாயில் இருக்கிறார். இவரது மகன் கெவின் பால். 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' படத்தின் தயாரிப்பு பணிகளை சோபியா பாலின் மகன் கெவின் பால் தான் கவனித்துக்கொண்டார்..
இந்தப்படத்தில் மோகன்லால்-மீனா தம்பதியின் மகளாக படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்தவர் எய்மா செபாஸ்டியன். இவரையே தற்போது தனது மருமகளாக்கி கொண்டுள்ளார் தயாரிப்பாளர் சோபியா பால். படப்பிடிப்பு சமயத்தில் கெவின் பாலுக்கும் எய்மாவுக்கும் இடையே காதல் உருவாகி, வளர்ந்து, தற்போது பெற்றவர்கள் சம்மதத்துடன் திருமணத்திற்கு நாளும் குறித்தாகிவிட்டது.
இந்த எய்மா செபாஸ்டியன் தான் 'ஜேக்கப்பிண்டே சுவர்க்கராஜ்யம்' படத்தில் நிவின்பாலியின் தங்கையாக அறிமுகமானவர் என்பவர் குறிப்பிடத்தக்கது. இவரைப்பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இவருக்கு அய்னா என்கிற சகோதரி இருக்கிறார்.. இவரைப்போலவே அவரும் இருக்கிறாரே என விசாரித்தால் இருவரும் ட்வின்ஸாம்..