தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த 2௦13ல் மலையாளத்தில் பாவனா நடித்த 'ஹனி பீ' என்கிற படம் வெளியானது. ஆசிப் அலி, பாவனா நடித்திருந்த இந்த படத்தை சண்டக்கோழி புகழ் வில்லன் நடிகர் லாலின் மகனான ஜூனியர் லால் இயக்கியிருந்தார். இந்தப்படத்தின் வெற்றி இதன் இரண்டாம் பாகத்தையும் 'ஹனி பீ-2' என்கிற பெயரில் எடுக்க வைத்து, அந்தப்படமும் சில மாதங்களுக்கு முன் ரிலீஸானது. இந்த நிலையில் இயக்குனர் ஜூனியர் லாலை ஒரு இளம் டிவி நடிகை பணம் கேட்டு டார்ச்சர் செய்வதாக ஒரு தகவல் வெளியானது.. இதுகுறித்து, நடந்தது என்ன என விளக்கம் அளித்துள்ளார் நடிகர் லால்
“இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு சற்று புதிய நபர்கள் தேவை என்பதால் கதாநாயகிக்கு துணையாக வரும் சில இளம் நடிகைகளை போட்டோக்கள் மூலம் செலக்ட் செய்தோம். இப்போது குற்றச்சாட்டு கூறிய இந்த பெண்ணும் வந்திருந்தார். எங்கள் வீட்டிற்கு வரவழைத்து தான் நானும் என் மகனும் அவரிடம் பேசினோம். படப்பிடிப்பு நடந்து வந்த சமயத்தில் இதில் நடித்த சீனிவாசனுக்கு ஒருநாள் உடல்நலம் சரியில்லாமல் போனதால், இந்தப்பெண் சம்பந்தப்பட்ட காட்சியை மறுநாள் மாற்றினோம். ஆனால் மறுநாள் லைட்டிங் பிரச்சனையால் சற்றே தாமதமாக இந்தப்பெண் சத்தம் போட ஆரம்பித்துவிட்டார்..
எனது மகனும் (இயக்குனர் ஜூனியர் லால்) பதிலுக்கு கோபத்தில் கத்திவிட்டு, உன் நடிப்பு சரியில்லை நீ கிளம்பு என கூறிவிட்டார். அது கூட உதவி இயக்குனர்களின் கருத்தை தான் அவர் சொன்னார். ஏற்கனவே 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசியிருந்த நிலையில் அந்தபெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாயாக கொடுத்தோம். அதன்பின் சில நாட்கள் கழித்து பத்து லட்சம் ரூபாய் நஷ்ட வேண்டும், டிவியில் மன்னிப்பும் கேட்க வேண்டும் என அந்தப்பெண் நோட்டீஸ் அனுப்பினார்..
நாங்கள் அதை கண்டுகொள்ளவில்லை... படமும் எந்த பிரச்சனையும் இன்றி ரிலீசாகிவிட்டது.. எங்கள் தரப்பில் தவறு இருந்தால் அப்போதே அந்தப் பெண் தனது தரப்பு நியாயத்தில் உறுதியாக நின்றிருக்க வேண்டும். அப்போது அமைதியாகவிட்டு இப்போது மீண்டும் இந்தப்பிரச்சனையை கிளறுவது ஆதாயம் தேடும் நோக்கில் தான். எனது சினிமா அனுபவத்தில் இவர்கள் போன்ற சில பெண்கள் கொடுக்கும் சிக்கல்களை சமாளித்து கடந்து தான் வந்துள்ளோம், இது ஒன்றும் புதிதல்ல” என விளக்கமாக கூறியுள்ளார் நடிகர் லால்.