அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிரதமர் நரேந்திர மோடியின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் விதமாக பாலிவுட்டில் ஏக் பிரேம் கதா என்ற படம் உருவாகி உள்ளது. அக்ஷ்ய் குமார், பூமி பட்னிகர் முக்கிய ரோலில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ நாராயணன் சிங் இயக்கியுள்ளார். இப்படம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருவதால் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளனர் படக்குழுவினர்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பூமி பட்னிகரிடம் சினிமாவில் சிபாரிசு குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது... "என்னுடைய சினிமா வாழ்க்கையில் சிபாரிசுக்கு வேலை இல்லை என்று தான் சொல்வேன். எனக்கு எந்த சினிமா பின்புலமும் கிடையாது, என் குடும்பத்தார் யாரும் சினிமாவில் கிடையாது. வாய்ப்பு கிடைத்ததால் படங்களில் நடிக்கிறேன். என்னைப்போன்று வாணி கபூர், ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா போன்றோரும் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் வந்தவர்கள். சினிமாவில் சிபாரிசு என்பது இல்லை என்று நான் சொல்ல மாட்டேன், இருக்கிறது, ஆனால் எனக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் எதுவும் நடக்கவில்லை" என்கிறார்.