கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
ஜீவன் நடிப்பில் சுசிகணேசன் இயக்கிய படம் திருட்டுப்பயலே. அந்த படத்தின் வெற்றி காரணமாகத்தான் விக்ரம் நடிப்பில் கந்தசாமி படத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றார் சுசிகணேசன். இந்நிலையில், தற்போது திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கிறது.
மேலும், திருட்டுப்பயலே படத்தின் முதல் பாகத்தில் ஜீவன் நடித்தார். இப்போது இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரத்தை பாபி சிம்ஹா தொடர்ந்துள்ளார். முதல் பாகத்தில் தொழிலதிபர் மனைவியை பிளாக்மெயில் செய்து பணம் சம்பாதிப்பார் ஜீவன். ஆனால் இந்த பாகத்தில் இணையதளம் மூலம் பெண்களை வசியப்படுத்தும் வேடத்தில் பாபி சிம்ஹா நடித்திருக்கிறார்.
அந்தவகையில், அவரிடம் சிக்கிக்கொள்ளும் மூன்று பெண்களைப்பற்றிய கதைதான் இந்த படமாம். அதில், அமலாபாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அம்மா கணக்கு படத்திற்கு பிறகு அமலாபாலை புதிய கோணத்தில் காண்பித்திருக்கிறாராம் சுசிகணேசன். அதனால் இந்த படத்தில் என்னை புதிய பரிமாணத்தில் காண்பித்திருக்கிறார் டைரக்டர். அதனால் இதன்பிறகு என்னை யாரும் சராசரி ஹீரோயினியாக நினைக்க மாட்டார்கள். கதையின் நாயகி பட்டியலில் சேர்த்து விடுவார்கள் என்கிறார் அமலாபால்.