'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிவகார்த்திகேயனின் வரவுக்குப் பிறகு சின்னத்திரையில் இருந்து நடிகர் நடிகைகள், தொகுப்பாளர்கள், தொகுப்பாளினிகள் என பலரும் சினிமாவுக்குள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, தொகுப்பாளினிகள் ரம்யா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட சிலர் சினிமாவில் சிறிய கேரக்டர்களில் நடித்து வந்தபோதும், கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நாயகியான பிரியா பவானி சங்கர், மேயாதமான் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்கள்.
இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாப்பிள்ளை சீரியலில் நடித்து வரும் ஜனனியும் தற்போது சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், வேலைக்காரன் படத்தில் நயன்தாராவின் தோழியாக அவர் நடித்திருக்கிறாராம். மேலும், சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசை இருந்தபோதும், படிப்படியாக முன்னேறவே ஆசைப்படுகிறேன் என்கிறார்.