தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவகார்த்திகேயனின் வரவுக்குப் பிறகு சின்னத்திரையில் இருந்து நடிகர் நடிகைகள், தொகுப்பாளர்கள், தொகுப்பாளினிகள் என பலரும் சினிமாவுக்குள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, தொகுப்பாளினிகள் ரம்யா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட சிலர் சினிமாவில் சிறிய கேரக்டர்களில் நடித்து வந்தபோதும், கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நாயகியான பிரியா பவானி சங்கர், மேயாதமான் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்கள்.
இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாப்பிள்ளை சீரியலில் நடித்து வரும் ஜனனியும் தற்போது சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், வேலைக்காரன் படத்தில் நயன்தாராவின் தோழியாக அவர் நடித்திருக்கிறாராம். மேலும், சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசை இருந்தபோதும், படிப்படியாக முன்னேறவே ஆசைப்படுகிறேன் என்கிறார்.