இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினி, இயக்கியுள்ள படம் வேலையில்லா பட்டதாரி-2. இந்த படத்திலும் அப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த நடிகர் நடிகைகளே இணைந்துள்ளனர். என்றாலும், பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைப்படி அவர்தான் வில்லி என்கிறார்கள். அந்த வகையில், இந்த படத்தில் தனுஷ்-கஜோலின் காம்பினேசன் நன்றாக ஒர்க் அவுட்டாகியிருப்பதாக சொல்கிறார் செளந்தர்யா ரஜினி.
அதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வசுந்தரா பரமேஸ்வரன் என்ற கேரக்டருக்கு யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது கஜோல் தான் சரியாக இருப்பார் என்று தோன்றியது. அதேபோல் அவரும் அந்த கதாபாத்திரத்திற்கு இயல்பான நடிப்பை கொடுத்து கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்.
அந்த வகையில், தமிழ் சினிமாவில் ஆண் கேரக்டருடன் ஒரு பெண் கேரக்டர் மோதும் படங்களென்றால், மன்னன், படையப்பாவைத் தான் சொல்ல வேண்டும். அந்த படங்களில் எனது தந்தை ரஜினியுடன் நடித்த விஜயசாந்தி மற்றும் ரம்யாகிருஷ்ணன் ஆகிய இருவரும் எதிரும் புதிருமான வேடங்களில் அற்புதமாக நடித்திருந்தார்கள். அதேமாதிரிதான் இந்த படத்திலும் தனுஷ்-கஜோலின் கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. ஆனால் அந்த படங்களின் சாயல் விஐபி-2வில் இருக்காது. இது ஒரு புதிய கோணத்தில் இருக்கும் என்கிறார் செளந்தர்யா ரஜினி.