ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் இதுவரை வந்த நிகழ்ச்சிகளில் 'ரியல்' இல்லாத விஷயங்கள் தான் அதிகமிருக்கும். ஆனால், அவற்றைத்தான் ரியாலிட்டி ஷோ என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது தான் 'பிக் பாஸ்' என்ற உண்மையான ரியாலிட்டி ஷோ வந்து ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியும் முழுவதும் 'ஸ்கிரிப்ட்' செய்யப்பட்டதுதான் என்றும் சிலர் கொண்டிருக்கிறார்கள். அப்படியே ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது என்று சொன்னாலும் யதார்த்த சினிமாவை விடவும் இந்த நிகழ்ச்சி சுவாரசியமாக ரசிக்க வைக்கிறது.
அதற்கு முழு முதற்காரணம் ஓவியா மட்டும் தான். நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே அவ்வளவு யதார்த்தமாக நடந்து கொள்ளும் ஓவியா நாளுக்கு நாள் அவருக்கான ரசிகர்களை அதிகரித்துக் கொண்டே வருகிறார். அவருடைய சின்னச் சின்ன செயல்கள் கூட ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
நேற்றைய நிகழ்ச்சியில் அது இன்னும் அதிகமாக இருந்து ரசிகர்களை வியக்க வைத்தது. நடந்து கொண்டிருக்கும் போது தெரியாமல் ஒரு சிறிய தூணை காலால் இடறிவிட்டார். அதனால் அந்த கல்லுக்குக் 'சாரி' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அடுத்து 'கன்பெஷன்' அறையில் பிக் பாஸுடன் பேசிக் கொண்டிருக்கும் போது தான் அழுவதை மக்களுக்குக் காட்டக் கூடாது என்பதற்காக முகத்தைத் திருப்பிக் கொண்டார். அதோடு காலையில் ஜாலியான பாடல்களை மட்டும் போடுங்கள், அன்பான பாடல்களைப் போட்டால் நான் அழுதுவிடுவேன் என குழந்தை போல கேட்டுக் கொண்டு அவரும் அழுது பார்ப்பவர்களையும் அழ வைத்தார். பின்னர், தன்னைப் பற்றி தவறாகப் பேசிக் கொண்டிருக்கும் ஜுலியை பேச அழைத்து ஆச்சரியப்படுத்தினார். வா, ஜுலி அதைப் பத்தி கேக்க மாட்டேன், சும்மா பேசிக்கிட்டிருப்போம் என கள்ளம் கபடமில்லாமல் அழைத்தார். இப்படி தன்னுடைய நிஜமான செயல்களால் தொடர்ந்து வியக்க வைத்துக் கொண்டேயிருக்கிறார் ஓவியா.
நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்குக் கிடைக்கும் சில கோடிகள், பெயரை விட ஓவியாவிற்குக் கிடைத்து வரும் பெயரும், புகழும் கமல்ஹாசனையே மிஞ்சிவிடும் போலிருக்கிறது.