பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தெலுங்குத் திரையுலகத்தில் போதைப் பழக்க விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிறப்பு விசாரணைப் பிரிவு தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. மொத்தம் 12 கலைஞர்களுக்கு விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுவரை இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகர்கள் தருண், நவ்தீப், சுப்பராஜ், ஒளிப்பதிவாளர் ஷாம் கே நாயுடு ஆகியோரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது. அவர்களிடமிருந்து தலைமுடி, நகம், ரத்தம் ஆகியோவை பரிசோதனைக்காக பெறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே விசாரணைக்கு வருவதற்கு தன்னுடைய வக்கீல்களை அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் நடிகை சார்மி வழக்கு தொடர்ந்துள்ளார். அத்துடன் தன்னிடமிருந்து பரிசோதனைக்காக தலைமுடி, நகம், ரத்தம் ஆகியவற்றையும் எடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார். 'பிக் பாக்ஸ்' நிகழ்ச்சியில் உள்ள நடிகை முமைத்கானும் விசாரணைக்கு வர உள்ளார்.
கடந்த சில நாட்களாக நடந்த விசாரணையில் நடிகை காஜல் அகர்வால், ராசி கண்ணா, லாவன்யா திரிபாதி உள்ளிட்ட சில நடிகர்களின் மேனேஜர் ஆக உள்ள ரோன்சன் ஜோசப் என்பவரை போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்துள்ளனர். அவர் வீட்டிலிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கைது விவகாரம் தெலுங்குத் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.