புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
'பாகுபலி-2' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது ராணா தனி கதாநாயகனாக நடித்துவரும் படம் நேனே ராஜூ நேனே மந்திரி'. தெலுங்கு இயக்குனர் தேஜா இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகிகளாக காஜல் அகர்வால் மற்றும் கேதரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளார்கள்.. 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் ராணாவுக்கு தென்னிந்திய மொழிகளில், குறிப்பாக கேரளாவில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளதை தொடர்ந்து, விரைவில் வெளியாக இருக்கும் இந்தப்படத்தை கேரளாவில் 'ராஜகிரீடம்' என்கிற பெயரில் வெளியிட இருக்கிறார்கள்...
இந்த 'ராஜகிரீடம்' படத்தின் மலையாள டிரைலரை, நடிகர் துல்கர் சல்மான் சோஷியல் மீடியா மூலமாக வெளியிட்டுள்ளார். ராணா, துல்கர் இருவரும் நடிக்க வருவதற்கு முன்பிருந்தே நண்பர்கள் தான் என்பது பெரும்பாலும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. துல்கர் சல்மான் சென்னை லயோலா காலேஜில் படித்தபோது நடிகர் நாகசைதன்யாவும், துல்கருடன் தான் சேர்ந்து படித்துள்ளார்.. அங்கே இருவருக்கும் தோன்றிய நட்பு, நாகசைதன்யாவின் உறவினரான ராணாவையும், துல்கரின் நட்பு வட்டாரத்தில் இணைத்ததாம். அன்றிலிருந்து இன்றுவரை அந்த நட்பு தொடர்ந்து வருகிறது. அந்த நட்பின் அடிப்படையில் தான் ராணாவின் 'ராஜகிரீடம்' மலையாள டிரைலரை வெளியிட்டுள்ளார் துல்கர் சல்மான்.