வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
ஜிஎஸ்டி திரையரங்க கட்டணங்களுக்கும் அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த மூன்று வாரங்களாகவே தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. ஜுலை மாதம் 7ம் தேதி எந்தப் படங்களும் வெளியாகவில்லை. ஆனால், 14ம் தேதி வெளியான படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. 21ம் தேதியும் ஏழு படங்கள் வரை வெளியானது. இந்தப் படங்களுக்கும் எப்படி வரவேற்பு இருக்குமோ என திரையுலக வட்டாரங்களில் கேள்வி இருந்தது.
ஆனால், வெளியான ஏழு படங்களில் 'விக்ரம் வேதா, மீசைய முறுக்கு' ஆகிய படங்கள் இளைஞர்களின் வரவேற்புடன் முதல் மூன்று நாட்களில் நல்ல வசூலைப் பெற்றதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'விக்ரம் வேதா' படத்தில் விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. 'மீசைய முறுக்கு' படம் முற்றிலும் இளைஞர்களுக்கான படமாகவே அமைந்துள்ளது.
இந்த இரண்டு படங்களும் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குப் பிறகு அதிகமான தியேட்டர் கட்டணங்களையும் மீறி மக்களை வர வழைத்துள்ளது திரையுலகத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்ல படங்களைக் கொடுத்தால் கட்டணத்தையும் மீறி மக்கள் வருவார்கள் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்துள்ளது. அதை மற்றவர்களும் தொடர்ந்தால் மட்டுமே தொடர்ச்சியான வரவேற்பு இருக்கும்.