நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
நடிகர் சாகித் கபூர், தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் பத்மாவதி என்ற படத்தில் மட்டும் தான் நடித்து வருகிறார். இதற்கு பிறகு வேறு எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை.
இதுகுறித்து சாகித் கபூர் கூறியதாவது... "பத்மாவதி படத்திற்கு பிறகு எனக்கு வேறு படங்கள் அமையாததால், நிச்சயம் நான் கவலை கொள்ள மாட்டேன். நல்ல படங்களை கொடுக்கவில்லை என்றால் தான் கவலைப்பட வேண்டும். நல்ல படங்களுக்காக காத்திருப்பதில் தவறு ஏதும் கிடையாது. வருகின்ற எல்லா படங்களிலும் நடிப்பதை விட நல்ல கதையம்சம் உள்ள ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி இருக்கிற கதையில் நானும் ஒரு பகுதியாக இருந்தாலே போதும்" என்கிறார்.
பத்மாவதி படத்தில் சாகித் கபூருடன் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகியோரும் நடித்து வருகிறார்கள். இப்படம் இந்தாண்டு நவ., 17-ம் தேதி ரிலீஸாக உள்ளது.