ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
துவ்வாத ஜகன்னாதம் படத்தில் பிராமண சமையல்காரராக நடித்த அல்லு அர்ஜூன் அடுத்து நடிக்கும் படம் நா பேரு சூர்யா. ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. வம்சி இயக்கும் இந்த படத்தில் அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்க, சரத்குமார் வில்லனாக நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
மேலும், ராணுவம் சம்பந்தப்பட்ட கதையில் தயாராகும் இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் படமாக்கப்பட உள்ளதாம். இதில் ராணுவ வீரராக அல்லு அர்ஜூன் நடிக்கிறாராம். இந்த படத்திற்காக தன்னை முழுமையாக தயார்படுத்தி வரும் அவர், தனது தலை முடியையும் மிலிட்டரி கட்டிங் செய்திருக்கிறாராம். ஆக்சன் கதையில் இந்த படம் தயாரானபோதும், ரொமான்ஸ் காட்சிகளுக்கும் ஓரளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதாம்.