மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரபல மலையாள நடிகை மைதிலி. 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். பல படங்களில் பாடியுள்ளார். சால்ட் அண்ட் பெப்பர், மற்றும் ஈ அடுத்த கலத்து ஆகிய படங்களில் நடித்ததற்காகக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். மைதிலி சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமா தயாரிப்பு நிர்வாகியான கிரண் குமார் என்பவரை காதலித்து வந்தார். பின்னர்தான் அவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்ட விபரம் தெரிந்தது. இதனால் மைதிலி கிரண் குமாரை பிரிந்து விட்டார்.
இதனை கிரண்குமாரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மைதிலியை பலவாறு டார்ச்சர் செய்து வந்திருக்கிறார். நீயும் நானும் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியும் வந்துள்ளார். ஆனால் இதனை மைதிலி பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் கிரண்குமார் மைதிலியுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மைதிலி, கிரண்குமார் மீது எர்ணாகுளம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கிரண்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.