'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
மலையாள நடிகர் திலீப், நடிகை விவகாரத்தில் சிறைக்கு சென்று பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. திலீப்பிற்கு வேண்டிய ஒருசிலர் மட்டும் அவரை சிறையில் வந்து சந்தித்துவிட்டு செல்கிறார்கள்.. ஆனால் திலீப்பின் அம்மா, மனைவி காவ்யா மாதவன், மகள் மீனாட்சி ஆகியோர் இதுநாள்வரை திலீப்பை சிறையில் வந்து சந்திக்கவே இல்லை.. காவ்யா மாதவனை பொறுத்தவரை போலீஸார் அவர் மீதும் சந்தேக கண் வைத்திருப்பதை உணர்ந்ததாலும், மேலும் சிறைக்கு கணவரை சந்திக்க வரும் விஷயம் அறிந்து பறந்துவரும் மீடியாக்களின் பார்வைக்கும் கேள்விக்கும் ஆளாகிவிட கூடாது என்றும் சிறைக்கு வந்து திலீப்பை பார்ப்பதை தவிர்த்து விட்டாராம்.
அதேசமயம் திலீப்பின் மகள் மீனாட்சி, திலீப் கைதான அன்றே இங்கிருந்து துபாயில் உள்ள திலீப்பின் நெருங்கிய உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது மகள், மனைவி, அம்மா ஆகியோருடன் பேசுவதற்கு வசதியாக, திலீப் சிறையில் உள்ள ஒரு ரூபாய் காயின் போனை பயன்படுத்திக்கொள்ளலாம் என சிறை நிர்வாகம் அனுமதித்துள்ளதாம். சிறையில் திலீப்பிற்கு பேப்பர் படிக்கும் வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும் அவர் நாளிதழ்கள் எதையும் வாசிப்பதில்லையாம். படித்தால் அதில் உள்ள தன்னைப்பற்றிய செய்திகள் மனதை காயப்படுத்துகின்றன என்பதால் படிப்பதில்லை என்கிறாராம் திலீப்.