தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கிய அனாமிகா படத்தில் நடித்தபோது அந்த படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நயன்தாரா பங்கேற்கவில்லை. அதனால் அவர் மீது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். அதையடுத்து நயன்தாராவுக்கு தெலுங்கு படங்களில் ஓராண்டு ரெட் கார்டு போடப் பட்டது. அதன் பின்னர் தமிழ், மலையாளப் படங்களில் மட்டுமே நடித்து வந்த நயன்தாரா, தற்போது மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து அவர் நடித்த புதிய நியமம் என்ற படம் தற்போது தெலுங்கில் வாசுகி என்ற பெயரில் ரிமேக்காகி வருகிறது. இந்த படம் போதைக்கு அடிமையான ஒரு பெண்ணை சிலர் பலாத்காரம் செய்து விடுவதும், பின்னர் அவர்களை அந்த பெண் பழிவாங்குவது போன்ற கதையில் உருவாகியிருக்கிறது.
தற்போது தெலுங்கு சினிமாத்துறையில் போதை பொருள் விவகாரம் சூடுபிடித்திருப்பதால், நயன்தாராவின் வாசுகி பட வட்டாரம் பரபரப்படைந்திருக்கிறது. அதோடு தற்போதைய சூழலுக்கேற்ப கதையில் சில திருத்தங்களையும் செய்து தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்தி வருகிறார்களாம்.