தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த ரோஜா, சினிமா வாய்ப்புகள் குறைந்த பிறகு அரசியலில் பிரவேசித்தார். தற்போது ஆந்திராவிலுள்ள நகரி தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். ஆனபோதும், சினிமா, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் ரோஜா, அரசியல்வாதியான பிறகு சென்னையில் இருந்து இடம்பெயர்ந்து ஆந்திராவிலேயே நிரந்தரமாக குடியேறியிருக்கிறார்.
மேலும், 2014ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு நகரி தொகுதி எம்எல்ஏவானார். ஆனபோதும், வருடத்திற்கு ஒரு முறை கூட தொகுதி பக்கமே ரோஜா வருவதில்லை என்றொரு குற்றச்சாட்டு நகரி தொகுதி மக்களிடம் நிலவி வருகிறது. இதனால் அந்த தொகுதியிலுள்ள ஐந்து கிராமத்து மக்கள் ஒன்று திரண்டு எங்களது தொகுதி எம்எல்ஏவை காண வில்லை என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.
முன்னதாக, ஹிந்துபூர் தொகுதி எம்எல்ஏவான நடிகர் பாலகிருஷ்ணாவும் தொகுதி பக்கம் வரவில்லை என்பதற்காக எங்கள் தொகுதி எம்எல்ஏவை காணவில்லை என்று அந்த தொகுதி மக்கள் போலீசில் புகார் செய்திருந்தது குறிப்படத்தக்கது.