பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை |
பழைய படங்களை எடுத்து தூசி தட்டி, இந்தக் காலத்திற்கேற்பட சில பட்டி, டிங்கரிங் வேலைகளைப் பார்த்து புதிதாக யோசித்த கதை போல படைப்பதுதான் இந்தக் காலத்திய டிரென்ட். அந்த விதத்தில் பழைய படங்களைக் காப்பியடிப்பதில் அட்லீ சிறந்த இயக்குனராக இருந்தார். அவருக்குப் போட்டியாக இப்போது 'விக்ரம் வேதா' படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி வந்துவிட்டனர்.
ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கத்தில் கமல்ஹாசன், அர்ஜுன் மற்றும் பலர் நடிக்க 1995ம் ஆண்டு வெளிவந்த படமான 'குருதிப் புனல்' படத்தின் கதையை காப்பியடித்து ஒருசில மாற்றங்கள் செய்து 'விக்ரம் வேதா' படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் மாதவன், அர்ஜுன் கதாபாத்திரத்தில் பிரேம், வில்லன் நாசர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
'குருதிப் புனல்' படத்தில் நாசர் தலைமையில் தீவிரவாதக் கும்பல். 'விக்ரம் வேதா' படத்தில் விஜய் சேதுபதி தலைமையில் லோக்கல் ரவுடி கும்பல். காவல் துறைக்கும் வில்லன்கள் குரூப்புக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படத்தின் பொதுவான கதை.
இந்தக் கால ரசிகர்களை வேண்டுமானால் புதிய கதை எனச் சொல்லி ஏமாற்றி விடலாம். 'குருதிப் புனல்' மாதிரியான படங்களைப் பார்த்துப் பார்த்து ரசித்தவர்களிடம் 'விக்ரம் வேதா' கதையை புதிய கதை என்றெல்லாம் சொல்லி ஏமாற்ற முடியாது.