ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பழைய படங்களை எடுத்து தூசி தட்டி, இந்தக் காலத்திற்கேற்பட சில பட்டி, டிங்கரிங் வேலைகளைப் பார்த்து புதிதாக யோசித்த கதை போல படைப்பதுதான் இந்தக் காலத்திய டிரென்ட். அந்த விதத்தில் பழைய படங்களைக் காப்பியடிப்பதில் அட்லீ சிறந்த இயக்குனராக இருந்தார். அவருக்குப் போட்டியாக இப்போது 'விக்ரம் வேதா' படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி வந்துவிட்டனர்.
ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கத்தில் கமல்ஹாசன், அர்ஜுன் மற்றும் பலர் நடிக்க 1995ம் ஆண்டு வெளிவந்த படமான 'குருதிப் புனல்' படத்தின் கதையை காப்பியடித்து ஒருசில மாற்றங்கள் செய்து 'விக்ரம் வேதா' படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் மாதவன், அர்ஜுன் கதாபாத்திரத்தில் பிரேம், வில்லன் நாசர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
'குருதிப் புனல்' படத்தில் நாசர் தலைமையில் தீவிரவாதக் கும்பல். 'விக்ரம் வேதா' படத்தில் விஜய் சேதுபதி தலைமையில் லோக்கல் ரவுடி கும்பல். காவல் துறைக்கும் வில்லன்கள் குரூப்புக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படத்தின் பொதுவான கதை.
இந்தக் கால ரசிகர்களை வேண்டுமானால் புதிய கதை எனச் சொல்லி ஏமாற்றி விடலாம். 'குருதிப் புனல்' மாதிரியான படங்களைப் பார்த்துப் பார்த்து ரசித்தவர்களிடம் 'விக்ரம் வேதா' கதையை புதிய கதை என்றெல்லாம் சொல்லி ஏமாற்ற முடியாது.