ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கத் திரையுலகில் சில நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் இடையே சமீப காலமாக போதைப் பொருளைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த விவகாரத்தில் சிக்கிய திரைப் பிரபலங்கள் சிலரை விசாரணைக்கு வருமாறு சிறப்பு விசாரணைக் குழுவினர் அழைத்தனர்.
இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகர் சுப்பராஜ், ஒளிப்பதிவாளர் ஷாம் கே நாயுடு ஆகியோர் விசாரணைக்குச் சென்று வந்தனர். அவர்களிடமிருந்து சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், சில நடிகர், நடிகைகள் அடுத்தடுத்த நாட்களில் விசாரணைக்குச் செல்ல உள்ளார்கள். அவர்களில் தற்போது 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் முமைத் கானும் ஒருவர். வரும் 27ம் தேதி அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி அவர் விசாரணையில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.
விசாரணைக் குழுவினர் தங்களது விசாரணையை மிகவும் இறுக்கியுள்ளதால் சில திரைப் பிரபலங்கள் கைது செய்யப்படலாம் என்றும் டோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகிறார்கள்.