தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
என்னதான் கமல் நாத்திகவாதியாக இருந்தாலும் அவரது மகள் ஸ்ருதிஹாசன் கடவுள் மீது அதிக நம்பிக்கை உடையவராக இருக்கிறார். விளம்பரம் ஒன்றுக்காக சண்டிகர் சென்றிருக்கிறார் ஸ்ருதிஹாசன். தன் விளம்பர வேலைகள் முடிவடைந்ததும், அமிர்தசரஸிலுள்ள பொற்கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
நீண்டநாட்களாக அவருக்கு பொற்கோவிலுக்கு செல்ல ஆசை, கடந்தமுறை கூட ஒரு படத்தின் புரொமோஷனுக்காக சென்றிருந்த ஸ்ருதி, கடைசி நேரத்தில் ஏற்பட்ட சில திட்ட மாறுதல்களால் கோவிலுக்கு செல்ல முடியாமல் போனது. இந்நிலையில் இப்போது அவர் பொற்கோவிலுக்கு சென்று வந்திருக்கிறார்.
இதுகுறித்து ஸ்ருதி மகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது... ''சிறுவயதிலிருந்தே பொற்கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது நிறைவேறவில்லை. இப்போது அது நிறைவேறியிருக்கிறது. என்னால் நம்ப முடியாத அனுபவம் இது, வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு ஆற்றலும், சூழ்நிலையும் அங்கிருப்பதை உணர்ந்தேன். அங்குள்ள மனிதர்களின் அன்பும், விருந்தோம்பலும் என்னை கவர்ந்தது. இப்படிப்பட்ட ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம் கிடைத்ததற்காக நன்றி'' என்கிறார்.
ஸ்ருதிஹாசன் தற்போது பாலிவுட்டில் "யாத்ரா" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபரில் திரைக்கு வர இருக்கிறது.