இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
போதை பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் வழக்கில் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த பல்வேறு நடிகர் நடிகைகள், இயக்குனர்களிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்தவகையில் நேற்று முன்தினம் இயக்குனர் பூரி ஜெகன்னாத்திடம் விசாரணை நடந்தது. அதையடுத்து நேற்று நடிகர் கிரில் சுப்பராஜூடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கவர்ச்சி நடிகை முமைத்கானின் பெயரும் இந்த போதை பொருள் வழக்கில் இடம்பெற்றிருப்பதால் அவருக்கும் போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால், இப்போது தனது இக்கட்டான சூழ்நிலையை பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் சொல்லி, அதற்கான அனுமதியை பெற்று விட்டாராம் முமைத்கான். அதனால், ஜூலை 27-ந்தேதி போதை தடுப்பு போலீசார் விசாரணையில் கலந்து கொள்ளும் முமைத்கான், அதையடுத்து தொடர்ந்து பிக்பாஸில் பங்கேற்பார் என்கிறார்கள்.