'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
தென்னிந்தியத் திரையுலகத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும், பல ஹீரோக்கள் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படும் நடிகையாகவும் இருப்பவர் நயன்தாரா. அவருடைய தற்போதைய சம்பளம் மூன்றரை கோடி என்று கிசுகிசுக்கிறார்கள். அவ்வளவு சம்பளம் தர சிலர் தயாராக இருந்தாலும் அவருக்கு கதை பிடித்தபடி இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதித்தார். யார் ஹீரோ என்பது பற்றியெல்லாம் அவருக்குக் கவலையில்லை. அதனால்தான் சிவகார்த்திகேயன் ஜோடியாகக் கூட நடிக்க சம்மதித்தார் என்று சொல்வார்கள்.
தெலுங்கில் டாப் ஹீரோக்கள் நயன்தாரா தங்களுடன் ஜோடியாக நடிக்க மாட்டாரா என்று காத்துக் கிடக்கிறார்கள். நயன்தாராவின் மனதை கரைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். நயன்தாராவை சினிமாவில் நடிக்க வைக்க சம்மதிப்பதே அவ்வளவு கஷ்டம் என்ற நிலையில் இப்போது விளம்பரப் படம் ஒன்றில் நடிக்க வைக்க எப்படியோ சம்மதித்துவிட்டார்கள். அந்த விளம்பரத்திற்காக நயன்தாராவிற்கு சுமார் 5 கோடி ரூபாய் சம்பளமாகக் கொடுத்திருக்கிறார்களாம். இந்தியாவின் முன்னணி கம்பெனி நிறுவனத்தின் டிடிஎச் சேவைக்கான விளம்பரத்தில் நடிப்பதற்குத்தான் அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். விரைவில் அந்த விளம்பரங்களில் நயன்தாரா தோன்ற இருக்கிறார்.
நயன்தாராவின் விளம்பரத்திற்கான சம்பளத்தைக் கேட்ட மற்ற நடிகர், நடிகைகள் பொறாமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.