பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சமீபத்தில் வெளிவந்த ரூபாய் படத்தில் கயல் சந்திரன் நண்பராகவும், லாரி டிரைவராகவும் நடித்திருப்பவர் கிஷோர் ரவிசந்திரன். லண்டனில் எம்.பி.ஏ படித்து விட்டு சினிமா நடிகராகியிருக்கிறார். அடுத்து ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறார். இதுபற்றி கிஷோர் கூறியதாவது:
நான் சென்னையில் படித்து முடித்து விட்டு எம்.பி.ஏ படிப்பிற்காக லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தேன். எங்களது குடும்ப நண்பரான சாட்டை எம்.அன்பழகன் வீட்டுக்கு வந்திருந்தார். கிஷோர், சினிமாவுக்கு ஏற்ற முகம் உனக்கு இருக்கு நடிக்கிறியா என்று கேட்டார். தமாஷுக்கு சொல்றார் என்று நினைத்து விட்டு நானும் லண்டன் சென்று எம்.பி.ஏ முடித்து விட்டு சென்னை வந்தேன்.
திரும்பவும் வீட்டுக்கு வந்த அவர் என்ன ரெடியா கிஷோர் நடிக்கிறியா என்று கேட்க, நானும் அரை மனதோடு சரி என்று சொன்னேன் மறு நாளே பிரபு சாலமன் சார் முன்பு என்னை நிறுத்தினார். என்னை பார்த்தவுடன் ஏம்பா அன்பு இவனை பார்த்தா லண்டன் மாப்பிள்ளை மாதிரி இருக்கான். லாரி டிரைவர் காரக்டருக்கு சரிப்படுமான்னு பாத்துக்க என்றார். அதற்கு பிறகு கூத்து பட்டறையில் ஆறு மாதம் பயிற்சி பெற்றேன். லாரி டிரைவர் கேரக்டர் என்பதால் லாரி ஓட்ட கற்றுக் கொண்டேன்.
லோடு ஏற்றும் கேரக்டர் என்பதால் நடு ராத்திரி 1 மணிக்கு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லுங்கியோடு செல்வேன். அங்கே உள்ளவர்களின் வாழ்க்கையை மனதுக்குள் படம் பிடித்துக் கொண்டேன். கடுகு எண்ணெய்யை முகம் உடம்பு முழுக்க தேய்த்துக் கொண்டு பீச்சில் வெயிலில் நின்றேன். கறுத்துப் போய் லாரி டிரைவராக போய் பிரபுசாலமன் அன்பழகன் முன்பு நின்றேன். அசந்து போய் உடனே ஓ.கே சொன்னார்கள். அப்படித்தான் இந்த ரூபாய் படத்தில் நடித்து சினிமா பிரவேசம் ஆனேன்..
அடுத்து பிரபு சாலமன் உதவியாளர் ஏழுமலை இயக்கத்தில் ஹீரோவாக களம் இறங்குகிறேன். இசையமைப்பாளர் சத்யா, யுகபாரதி, தம்பிராமைய்யா, சரண்ராஜ் என்கிற ஜாம்பவான்களும் இதில் இருக்கிறார்கள். எந்த கேரக்டராக இருந்தாலும் நடிச்சி என்னை நிருபிக்கணும் அதுதான் ஆசை என்கிறார் கிஷோர்.