ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான ஷாருக்கான் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் தீவிரமானவர். அவர் தனது நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் கோல்கட்ட அணியை வாங்கினார். இந்த நிறுவனத்தில் அவரது மனைவி கவுரி கானும், நடிகை ஜுகி சாவ்லாவும் பங்குதாரர்களாக உள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வெற்றி பெற்றதும் தனது நிறுவனத்தின் பங்குகளை வெளியிட்டார் ஷாருக்கான். இதில் ஜுகி சால்வாவின் கணவர் நடத்தும் தி சீ ஐலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்திற்கு ஒரு பங்கு பத்து ரூபாய் என்கிற வீதம் 50 லட்சம் பங்குகளை விற்றுள்ளார். ஜுகி சாவ்லாவுக்கு 40 லட்சம் பங்குகள் விற்கப்பட்டது. ஷாருக் தன் வசம் ஒரு கோடி பங்குகளை வைத்துக் கொண்டார்.
ஆனால் ஒரு பங்கின் விலை சந்தை மதிப்பில் கூடுதலாக இருந்தும் அதனை குறைத்துக் காட்டி 10 ரூபாய்க்கு ஷாருக்கான் விற்றுள்ளதாகவும், இதனால் அரசுக்கு 73 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டி அமலாக்கத்துறை ஷாருக்கான் உள்ளிட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு வருகிற ஆகஸ்ட் 23ந் தேதி நடக்கிறது. அப்போது ஷாருக்கான், அவரது மனைவி கவுரி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டுமம் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.