அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு கமல் வெளியிட்ட அறிக்கையில் தமிழக அரசின் ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார். அதில், ஒன்றாக திரைத்துறையில் வரிவிலக்கு சலுகை பெறுவதற்கு பெரிய அளவில் லஞ்சம் பெறப்படுகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனை இயக்குனரும், நடிகருமான பார்த்திபனும் ஒப்புக் கொண்டிருக்கிறார். நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவரிடம் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:
வரிவிலக்கு பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. என்னை போல ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் பயத்தின் காரணமாக லஞ்சம் கொடுக்கிறார்கள் என்று கமல் கூறியிருப்பது மிகச் சரியானது. அவர் சொல்லியிருக்கிற ஒரு சிலரில் நானும் ஒருவன். என் படத்துக்கும் லஞ்சம் கேட்டார்கள் நான் தர மறுத்துவிட்டேன். லஞ்சத்தை அவர்கள் நேரடியாக கேட்பதில்லை. மறைமுக கேட்கிறார்கள், அல்லது உணர்த்துகிறார்கள். படம் தாமதமானாலும் நஷ்டம், வரிவிலக்கு கிடைக்காவிட்டாலும் நஷ்டம் என்பதால் வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர்களும் கொடுத்து விடுகிறார்கள். இது இந்த ஆட்சியில் மட்டுமல்ல எல்லா ஆட்சியிலும் நடந்து வரும் விஷயம்.
தவறு நடக்கிறது என்று சுட்டிக் காட்டினால் அரசு இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர நிரூபியுங்கள் பார்க்கலாம் என்று சொல்வது தேவையற்றது. ஓட்டுப் போட்ட மக்களுக்கு கேள்வி கேட்க உரிமையிருக்கிறது. அப்படி இருக்கும்போது தகுதியோடு இருக்கிற ஒரு நடிகர் தவறை சுட்டிக்காட்டுவது வரவேற்கத்தக்கது. கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது அமைச்சர்களின் கடமை.
இவ்வாறு பார்த்திபன் கூறினார்.