ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பெங்களூரைச் சேர்ந்த தமிழ் பொண்ணு காயத்ரி. ஏன் இப்படி மயக்கினாய் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமமானார். நெடுஞ்சாலை கிருஷ்ணா இயக்கிய இந்தப் படம் வெளிவரவில்லை. அதன் பிறகு 18 வயசு படத்தில் நடித்தார். அது வெற்றி பெறவில்லை.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் மூலம் சிறிது கவனம் பெற்றார். அதன்பிறகு நடித்த பொன்மாலை பொழுது, ரம்மி, படங்களும் கைகொடுக்கவில்லை. நடித்து முடித்த மத்தாப்பூ, புரியாத புதிர் படங்கள் வெளிவரவில்லை. இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் காயத்ரிக்கு எல்லாமே தடங்கலாகவே இருந்தது.
விஜய் சேதுபதி ஜோடியாக நடித்துள்ள புரியாத புதிர் படத்தை பற்றி நல்ல பேச்சு இருந்தாலும் என்ன காரணத்தாலோ அந்தப் படம் வெளிவரவில்லை. அது வந்த பிறகு தான் தொடர்ந்து நடிப்பது என்ற முடிவில் இருந்தார். வந்த ஒரு சில படங்களையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார்.
இந்த நிலையில் கவுதம் மேனன் தயாரிக்கும் பொன் ஒன்று கண்டேன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இது தெலுங்கில் வெளிவந்த பெல்லி சூப்லு படத்தின் ரீமேக். இதனை செந்தில் வீராசாமி இயக்குகிறார். விஷ்ணு விஷால், தமன்னா நடிக்கிறார்கள். இப்போது இவர்களுடன் காயத்ரியும் நடிக்கிறார். தர்புகா சிவா இசை அமைக்கிறார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படமாவது காயத்ரிக்கு நல்ல எதிர்காலத்தை தருமா என்பதை காலம்தான் சொல்லும்.