பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
கொம்பன் படத்துக்குப் பிறகு வெற்றிப்படங்களைக் கொடுக்காததினால் கார்த்தியின் நட்சத்திர அந்தஸ்து சற்றே ஆட்டம் கண்டுள்ளது. அதனால் சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார் கார்த்தி.
கார்த்திக்கு ஜோடியாக இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கில் டப் செய்யும் எண்ணத்தில் ரகுலுக்கு பெரிய சம்பளம் கொடுத்து புக் பண்ணியுள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் படப்பிடிப்பு ஜெய்ஸால்மர், பூஜ் மற்றும் சென்னை பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்பட்டநிலையில் விரைவில் டீஸரையும் வெளியிட உள்ளனர். தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இறுதிகட்டப் பணிகள் திட்டமிட்ட தேதியில் முடிவடையாததினால் படத்தின் வெளியீட்டை இன்னும் முடிவு செய்யாமல் இருக்கிறார்கள்.
இதன் காரணமாக, தீரன் அதிகாரம் ஒன்று படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத் துவக்கம் சில வாரங்கள் தள்ளிப்போகிறது. இதனால் பாண்டிராஜ் சற்றே அப்ஸெட்டாகி இருக்கிறாராம்.