பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
அச்சம் என்பது மடமையடா, சத்ரியன் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர், மஞ்சிமா மோகன். இரு படங்களுமே, எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற போதிலும், கோடம்பாக்கத்தில், அவருக்கு அதிக மவுசு உள்ளது. முன்னணி நடிகர்களில் பெரும்பாலானோர், தங்கள் படங்களில், மஞ்சிமாவை நடிக்க வைக்க, ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால், மஞ்சிமாவோ, கவர்ச்சி வேடங்களில் நடிப்பது இல்லை என்ற முடிவுடன் இருக்கிறார். உதயநிதியுடன், இப்படை வெல்லும் என்ற படத்தில் மட்டுமே தற்போது நடித்து வருகிறார். இவரது சொந்த ஊர், கேரள மாநிலம் பாலக்காடு. ஆனாலும், சென்னையில் உள்ள கல்லுாரியில் படித்தவர் என்பதால், சரளமாக தமிழ் பேசத் தெரியுமாம். இது, இவருக்கு கூடுதல் பிளஸ் பாயின்டாக அமைந்துள்ளது.