தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிஆர் ஸ்டுடியோ தயாரிப்பில், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பரேலி கி பார்பி. ஆயுஸ்மான் குராணா, கிர்த்தி சனோன் மற்றும் ராஜ்குமார் ராவ் முக்கிய ரோலில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது பேசிய ஆயுஸ்மானிடம், உங்களது மேரி பியாரி பிந்து படம் தோல்வியடைந்தது ஏன் என்று செய்தியாளர்களிடம் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த ஆயுஸ்மான், "மேரி பியாரி பிந்து படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் எழுந்தன. சிலருக்கு படம் பிடித்திருந்தது, சிலருக்கு பிடிக்கவில்லை. மேலும் என்னுடைய ரிலீஸான நேரத்தில் பாகுபலி-2 படமும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அதனால் எனது படம் தோல்வியடைந்தது. ஒருவேளை பாகுபலி-2 ரிலீஸாகமால் இருந்தால் என் படம் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்" என்றார்.
பரேலி கி பார்பி படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி ரிலீஸாக உள்ளது.