தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அசாமைச் சேர்ந்த பிரபல நடிகை, பிதிஷா பெஸ்பருவாவின் உடல், குர்கானில் உள்ள அவரது வீட்டில், துாக்கில் தொங்கிய நிலையில்மீட்கப்பட்டது. இதையடுத்து, பிதிஷாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்தவர், பிதிஷா பெஸ்பருவா (வயது 30). பிரபல, டிவி சேனல்களில், பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள இவர், ஜக்கா ஜாசூஸ் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். பிதிஷா, நிதிஷ் என்பவரை காதலித்து, திருமணம் செய்தார். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்து வந்த பிதிஷா, சமீபத்தில் ஹரியானா மாநிலம் குர்கானில் வாடகை வீட்டில் குடியேறினார். நேற்று முன்தினம் மாலை, பல முறை முயன்றும், பிதிஷாவை போனில் தொடர்பு கொள்ள முடியாததால், அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை, போலீசில் புகார் அளித்தார்.
பிதிஷாவின் வீட்டிற்கு சென்ற போலீசார், உட்புறமாக தாழிடப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்குள்ள அறையில் பேனில், துாக்கில் தொங்கிய நிலையில் இருந்த பிதிஷாவின் உடலை மீட்டனர். அந்த அறையில், தற்கொலை குறிப்பு ஏதும் கிடைக்காததால், பிதிஷா கொலை செய்யப்பட்டு, துாக்கில் தொங்க விடப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
பிதிஷாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அவரது கணவர் நிதிஷை, போலீசார் கைது செய்தனர்.