டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நினைவு நாள் வருகிற 27ந் தேதி கொண்டாடப்படுகிறது. ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்த நிலையில் திரைப்பட கலைஞர்கள் இணைந்து அப்துல் கலாம் ஆன்தம் என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளனர்.
இந்த ஆல்பத்தை இயக்குனர் வசந்த் இயக்கி உள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். தொழில் அதிபர் ஜிஆர்கே.ரெட்டி தயாரித்துள்ளார். இந்த ஆல்பத்தை அவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கி உள்ளார். பிரதமர் கலந்து கொள்ளும் மணி மண்டப திறப்பு விழாவில் இந்த ஆல்பம் வெளியிடப்படுவதோடு, அங்கே திரையிட்டு காட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தான் இதுவரை எழுதியுள்ள பாடல்களிலேயே இது ஒரு சிறந்த பாடல் எனவும், இந்தியர்களின் அரிய சொத்தாக இருந்த கலாம் ஐயாவுக்காக எழுதும்பொழுது தான் மிகவும் நெகிழ்ந்து போனதாகவும் வைரமுத்து கூறியுள்ளார்.