பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய நடிகர் ரஜினிகாந்த். இந்த சமூக வலைத்தள உலகத்தில் அவரும் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு டுவிட்டரில் ஒரு கணக்கை ஆரம்பித்தார். ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அவரைத் தொடர்ந்ததால் புதிய சாதனை படைத்தார்.
அது மட்டுமல்ல அந்த ஒரு நாள் சாதனையில் உலக அளவில் சாதித்த முதல் 10 பேரில் ரஜினியும் இடம் பெற்றார். எப்போதோ ஒரு முறை மட்டுமே ரஜினிகாந்த் டுவிட்டரைப் பயன்படுத்தினாலும் அவருடைய ஒவ்வொரு டுவீட்டும், அதிக லைக்குகள், ரிடுவீட் என பெற்றுக் கொண்டிருக்கிறது.
நேற்று ரஜினிகாந்தின் டுவிட்டர் கணக்கில் தொடர்பாளர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தொட்டது. அவருடைய கணக்கிலும் 4M என மாறியது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் யார் செய்த வேலையோ, சிலர் அவரைத் தொடர்வதிலிருந்து விலகினார். அதனால், 4 மில்லியனிலிருந்த அவருடைய தொடர்பாளர்களின் எண்ணிக்கை 3.99 மில்லியனாகக் குறைந்தது.
தமிழ்த் திரைப்பட நடிகர்களில் தனுஷ் மட்டுமே 5 மில்லியனைக் கடந்த நடிகராக இருக்கிறார். தனுஷைத் தாண்ட வேண்டுமென்றால் ரஜினிக்கு இன்னும் 10 லட்சம் தொடர்பாளர்கள் வேண்டும். இருந்தாலும், அவரை 4 மில்லியனைத் தாண்ட வைத்துவிட்டு, திடீரென அதைக் குறைக்கும் வேலைகளில் ஈடுபட்ட அந்த சிலர் யாரோ?. வேண்டுமென்றே அவர்கள் செய்திருப்பது போலவே தெரிகிறது. எதற்காக அவர்கள் ரஜினியின் டுவிட்டரில் இப்படி ஒரு விளையாட்டை விளையாடியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.