ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனை ஹீரோவாக வைத்து 'அறம் செய்து பழகு' என்ற படத்தை இயக்கி வருகிறார் சுசீந்திரன். இந்தப் படத்தை தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் வெளியிடுவதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
விரைவில் வெளியாகவிருக்கும் இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம்சரண் தேஜாவை இயக்கவிருக்கிறார் சுசீந்திரன். இந்த படம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் இப்போது நடந்து வருகின்றன. சுசீந்திரன் சொன்ன கதையைக் கேட்டு பிடித்துபோன ராம்சரண் தேஜா, அவரே தயாரிப்பாளரையும் கைகாட்டி இருக்கிறார்.
அது மட்டுமல்ல, சுசீந்திரன் இதுவரை வாங்காத அளவுக்கு மிகப்பெரிய தொகையையும் சம்பளமாக பிக்ஸ் பண்ணிக் கொடுத்திருக்கிறாராம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகவிருக்கிறது. இப்படத்தின் தமிழ் ரைட்ஸை தனக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம் சுசீந்திரன்.