தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். அப்படி நடித்த அந்த முதல் சீரியலிலேயே அவர் பெரிய அளவில் பிரபலமாகி விட்டார். அதையடுத்து திடீரென்று அந்த சீரியலில் இருந்து வெளியேறினார் பிரியா. அதனால் அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அந்த நேரத்தில் செய்திகள் கசிந்தன. அதையடுத்து சில மாதங்களாக பிரியா பவானி சங்கர் குறித்த செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. பின்னர் ஒரு படத்தில் அவர் நடித்து வருவதாக சஸ்பென்ஸ் வைத்து அவரது புகைப்படங்களை மட்டும் முதலில் வெளியிட்டனர்.
அதன்பிறகு மேயாத மான் என்ற படத்தில் அவர் நாயகியாக நடித்திருக்கும் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்படி பிரியா பவானி சங்கர் நடித்துள்ள மேயாத மான் படத்தில் வைபவ் நாயகனாக நடித்திருக்கிறார். டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் அந்த படத்தை தயாரித்துள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கான டப்பிங் பேசியிருக்கிறார் பிரியா பவானி சங்கர். இந்த தகவலை தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ள அவர், இந்த படத்திற்காகத்தான் முதன்முதலாக எனது சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.