பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியவர் சந்தானம். அவர் நாயகனாக நடித்து வெளிவந்த 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான்,' ஆகிய படங்கள் வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அவர் நாயகனாக நடிப்பதை விடவில்லை. அடுத்து அவர் நாயகனாக நடித்து வெளிவந்த 'தில்லுக்கு துட்டு' படம் வெளிவந்தது. கடந்த வருட ஜுலை மாதம் வெளிவந்த அந்தப் படம் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதற்கடுத்து சந்தானம் நாயகனாக நடித்து இந்த ஒரு வருடத்தில் ஒரு படம் கூட வெளிவரவில்லை.
அவர் நாயகனாக நடித்து வரும் 'சர்வர் சுந்தரம்' படம் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் படத்தின் டிரைலரை வெளியிட்டும் இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், படம் இன்னும் வெளிவராமலே உள்ளது. 'தில்லுக்கு துட்டு' படத்தை இந்நேரம் ரசிகர்கள் மறந்தே போயிருப்பார்கள். இரண்டு பட தோல்விக்குப் பிறகு கிடைத்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளும் எண்ணம் இல்லாமல் சந்தானமும் தனது அடுத்த வெளியீட்டிற்காகத் தடுமாறிக் கொண்டிருக்கிறார். இத்துடன் 'ஓடி ஓடி உழைக்கணும், சக்க போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி' ஆகிய படங்களிலும் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். 'சர்வர் சுந்தரம்' படத்தின் தாமதம் மற்ற படங்களையும் பாதிக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.
இனியாவது, சந்தானம் சமர்த்தாக நடந்து கொள்வாரா என பார்ப்போம்.