வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பமான நாளிலிருந்தே சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. கடந்த வாரம் முழுவதும் அந்த சர்ச்சை அரசியலில் கூட எதிரொலித்தது. இந்த ஒரு டிவி நிகழ்ச்சியில் கலாச்சாரச் சீரழிவு என்று சொல்பவர்கள், பல தொலைக்காட்சித் தொடர்களில் வரும் காட்சிகளுக்கு என்ன சொல்லப் போகிறார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்புகிறார்கள்.
தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியே பரவாயில்லை போலிருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. நேற்று ஒளிபரப்பான தெலுங்கு 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களுடன் சேர்ந்து நடிகை முமைத் கான், சிகரெட் பிடித்த காட்சி ஒளிபரப்பாகி நேயர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழிலும் பிக் பாஸ் வீட்டில் சிகரெட் பிடிப்பவர்களுக்கு என்று தனி அறை ஒன்று உள்ளது. ஆனால், இதுவரை அங்கு யாரும் சிகரெட் பிடிப்பது போல காட்சி இடம் பெற்றதில்லை. நேற்று தான் அந்தப் பக்கமாக நடிகர் சக்தியும், காயத்ரியும் பேசிக் கொண்டு போவது போன்ற காட்சி இடம் பெற்றது. சக்தி மட்டுமே அந்த அறைக்குள் நுழைந்தார்.
ஆனால், தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் உள்ள சிகரெட் பிடிப்பவர்களுக்கான தனி அறையில் நான்கு ஆண் போட்டியாளர்களுடன் முமைத் கான் சிகரெட் பிடித்தபடியே பேசிக் கொண்டிருந்த காட்சியை ஒளிபரப்பினார்கள். ஒரு கட்டத்தில் எதிர்புறம் இருப்பவர் காமிராவில் மறைத்துக் கொள்வதற்காக மறுபுறம் வந்தார். ஆனால், அப்படியும் அவர் காமிராவின் பார்வையில் மறையவில்லை. இந்த முமைத் கானுக்குத்தான் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீக்கிரமே, ஆந்திரா, தெலுங்கானாவில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டங்களை எதிர்பார்க்கலாம்.