ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் நடிகர் திலகம் சிவாஜிக்கு தமிழக அரசு முழு உருவ சிலை வைத்தது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக தமிழக அரசே ஒத்துக் கொண்டதால் சிலையை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தற்போது சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரில் சிவாஜிக்கு மணிமண்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மணி மண்டத்தில் சிவாஜி சிலையை வைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அந்த அடிப்படையில் வருகிற 21ந் தேதி சிவாஜி மணிமண்டபத்தை திறப்பது என்றும், சிவாஜி சிலையை அங்கு வைப்பது என்றும் அரசு முடிவு செய்தது.
இந்த நிலையில் சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன், சிவாஜி சிலையை கடற்ரையில் உள்ள மற்ற தலைவர்கள் சிலை வைத்திருக்கும் வரிசையில் வைக்கப்பட வேண்டும். அது முடிவாகும் வரை சிவாஜி சிலை அகற்றப்படக்கூடாது என்று வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கிறஞர் நீதிமன்றத்தில் பழைய தீர்ப்பையும், அரசின் நடவடிககையையும் எடுத்துக் கூறினார். மனுதாரரின் வழக்கறிஞர் இந்த வழக்கு தொடர்பாக அரசின் பதில் மனு வரும் வரை சிலையை அகற்றக்கூடாது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி. சிலையை அகற்றி நினைவிடத்தில் வைக்க எந்த தடையும் இல்லை. இது தொடர்பாக தமிழக அரசு 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால் சிவாஜி சிலை அகற்றப்படுவது உறுதியாகியிருக்கிறது.