டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகை பாவனா பாலியல் தொந்தரவு தொடர்பான வழக்கில், நடிகர் திலீப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க, கேரள ஐகோர்ட் மறுத்து விட்டது. ஜூலை 20ல் இம்மனு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த பாவனா, 31, கேரளாவில் கடத்தப்பட்டு, பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது என கூறி, அங்கமாலி நீதிமன்றம் திலீப்புக்கு ஜாமின் மறுத்தது.
மீண்டும் மனு
நேற்று, கேரள ஐகோர்ட்டில், திலீப் தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனக்கு எதிராக சாட்சி எதுவும் இல்லை; சாட்சிகளை கலைப்பேன் என கூறுவது அடிப்படை ஆதார மற்றது என, மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும், இந்தவழக்கில் கூட்டு சதி இல்லை என, முதல்வர் பினராயி விஜயன் கூறிய கருத்தும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இம்மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என, திலீப்பின் வழக்கறிஞர் பிரதீஷ் சாக்கோ விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த கோர்ட், ஜூலை 20ல் விசாரிப்பதாக கூறியுள்ளது. திலீப்பின் ஜாமினை கடுமையாக எதிர்க்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் காங்., - எம்.எல்.ஏ., அன்வர் சாதத், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,வும், நடிகருமான முகேஷ் ஆகியோரிடம், நேற்று வாக்குமூலம் பதிவு செய்தனர். திலீப் துாண்டுதலில் பாவனாவை பலாத்காரம் செய்த, பல்சர் சுனில், சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் முகேஷிடம் டிரைவராக பணிபுரிந்தவர். எம்.எல்.ஏ., அன்வர் சாதத், நடிகர் திலீப்பின் நெருங்கிய நண்பர். பாவனா கடத்தப்பட்ட அன்றும், அதற்கு முன்னும், திலீப்புடன், அன்வர் சாதத் அடிக்கடி போனில் பேசியது தெரிந்துள்ளது. இதனால், எம்.எல்.ஏ.,க்கள் இருவரிடமும் திருவனந்தபுரத்தில் வாக்குமூலம் பெறப்பட்டது.
யூ டியூப் அலறல்
இந்நிலையில், பாவனாவை மானபங்கப்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோ, வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், அங்கிருந்து, யூ டியூப்பில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது; இதை தடுக்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- நமது சிறப்பு நிருபர் -