‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பண்டிகை மற்றும் திரி படங்களில் வில்லனாக நடித்திருப்பவர் அர்ஜெய். இரண்டிலும் தன் வில்லத்தனமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார். இந்த இடத்தை அடைவதற்கு அவர் 8 வருடங்கள் போராடியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
நடிப்பதற்கான திறமைகளை வளர்த்துக்கொண்டு 2009ஆம் ஆண்டு முதல் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தேன். நான் சிகப்பு மனிதன், நாய்கள் ஜாக்கிரதை போன்ற படங்களில் சின்ன சின்ன வில்லன் வேடங்கள் செய்தேன். பிறகு யமன் படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் செய்தேன். அதன் பிறகு தெறி படத்தில் ஒரு சிறு வில்லன் கதாபாத்திரம் கிடைத்தது.
தற்பொழுது பண்டிகை மற்றும் திரி படங்களில் முதன்மை வில்லனாக நடித்துள்ளேன். திரியில் அமைச்சரின் மகனாகவும், பண்டிகையில் ஹீரோ கிருஷ்ணாவுடன் மோதும் பிரதான பைட்டராகவும் நடித்துள்ளேன்.
பண்டிகை மற்றும் திரி எனது நடிப்பு வாழ்க்கையை அடுத்த லெவெலுக்கு கொண்டு போகும் என நம்புகிறேன். இவ்விரண்டு படங்களில் எனது உழைப்புக்கும் நடிப்புக்கும் கிடைத்த வரவேற்பு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . நல்ல கதாபாத்திரங்களில் நடித்து குணச்சித்திர நடிகராக சாதிக்கவும் ஆசைப் படுகிறேன். எல்லா வகையான சவாலான மற்றும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்திற்கும் பொருந்தும் நடிகனாகவே இருக்க விரும்புகிறேன். என்கிறார் அர்ஜெய்.