பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பண்டிகை மற்றும் திரி படங்களில் வில்லனாக நடித்திருப்பவர் அர்ஜெய். இரண்டிலும் தன் வில்லத்தனமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார். இந்த இடத்தை அடைவதற்கு அவர் 8 வருடங்கள் போராடியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
நடிப்பதற்கான திறமைகளை வளர்த்துக்கொண்டு 2009ஆம் ஆண்டு முதல் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தேன். நான் சிகப்பு மனிதன், நாய்கள் ஜாக்கிரதை போன்ற படங்களில் சின்ன சின்ன வில்லன் வேடங்கள் செய்தேன். பிறகு யமன் படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் செய்தேன். அதன் பிறகு தெறி படத்தில் ஒரு சிறு வில்லன் கதாபாத்திரம் கிடைத்தது.
தற்பொழுது பண்டிகை மற்றும் திரி படங்களில் முதன்மை வில்லனாக நடித்துள்ளேன். திரியில் அமைச்சரின் மகனாகவும், பண்டிகையில் ஹீரோ கிருஷ்ணாவுடன் மோதும் பிரதான பைட்டராகவும் நடித்துள்ளேன்.
பண்டிகை மற்றும் திரி எனது நடிப்பு வாழ்க்கையை அடுத்த லெவெலுக்கு கொண்டு போகும் என நம்புகிறேன். இவ்விரண்டு படங்களில் எனது உழைப்புக்கும் நடிப்புக்கும் கிடைத்த வரவேற்பு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . நல்ல கதாபாத்திரங்களில் நடித்து குணச்சித்திர நடிகராக சாதிக்கவும் ஆசைப் படுகிறேன். எல்லா வகையான சவாலான மற்றும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்திற்கும் பொருந்தும் நடிகனாகவே இருக்க விரும்புகிறேன். என்கிறார் அர்ஜெய்.