டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பண்டிகை மற்றும் திரி படங்களில் வில்லனாக நடித்திருப்பவர் அர்ஜெய். இரண்டிலும் தன் வில்லத்தனமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார். இந்த இடத்தை அடைவதற்கு அவர் 8 வருடங்கள் போராடியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
நடிப்பதற்கான திறமைகளை வளர்த்துக்கொண்டு 2009ஆம் ஆண்டு முதல் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தேன். நான் சிகப்பு மனிதன், நாய்கள் ஜாக்கிரதை போன்ற படங்களில் சின்ன சின்ன வில்லன் வேடங்கள் செய்தேன். பிறகு யமன் படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் செய்தேன். அதன் பிறகு தெறி படத்தில் ஒரு சிறு வில்லன் கதாபாத்திரம் கிடைத்தது.
தற்பொழுது பண்டிகை மற்றும் திரி படங்களில் முதன்மை வில்லனாக நடித்துள்ளேன். திரியில் அமைச்சரின் மகனாகவும், பண்டிகையில் ஹீரோ கிருஷ்ணாவுடன் மோதும் பிரதான பைட்டராகவும் நடித்துள்ளேன்.
பண்டிகை மற்றும் திரி எனது நடிப்பு வாழ்க்கையை அடுத்த லெவெலுக்கு கொண்டு போகும் என நம்புகிறேன். இவ்விரண்டு படங்களில் எனது உழைப்புக்கும் நடிப்புக்கும் கிடைத்த வரவேற்பு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . நல்ல கதாபாத்திரங்களில் நடித்து குணச்சித்திர நடிகராக சாதிக்கவும் ஆசைப் படுகிறேன். எல்லா வகையான சவாலான மற்றும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்திற்கும் பொருந்தும் நடிகனாகவே இருக்க விரும்புகிறேன். என்கிறார் அர்ஜெய்.