நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பண்டிகை மற்றும் திரி படங்களில் வில்லனாக நடித்திருப்பவர் அர்ஜெய். இரண்டிலும் தன் வில்லத்தனமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார். இந்த இடத்தை அடைவதற்கு அவர் 8 வருடங்கள் போராடியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
நடிப்பதற்கான திறமைகளை வளர்த்துக்கொண்டு 2009ஆம் ஆண்டு முதல் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தேன். நான் சிகப்பு மனிதன், நாய்கள் ஜாக்கிரதை போன்ற படங்களில் சின்ன சின்ன வில்லன் வேடங்கள் செய்தேன். பிறகு யமன் படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் செய்தேன். அதன் பிறகு தெறி படத்தில் ஒரு சிறு வில்லன் கதாபாத்திரம் கிடைத்தது.
தற்பொழுது பண்டிகை மற்றும் திரி படங்களில் முதன்மை வில்லனாக நடித்துள்ளேன். திரியில் அமைச்சரின் மகனாகவும், பண்டிகையில் ஹீரோ கிருஷ்ணாவுடன் மோதும் பிரதான பைட்டராகவும் நடித்துள்ளேன்.
பண்டிகை மற்றும் திரி எனது நடிப்பு வாழ்க்கையை அடுத்த லெவெலுக்கு கொண்டு போகும் என நம்புகிறேன். இவ்விரண்டு படங்களில் எனது உழைப்புக்கும் நடிப்புக்கும் கிடைத்த வரவேற்பு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . நல்ல கதாபாத்திரங்களில் நடித்து குணச்சித்திர நடிகராக சாதிக்கவும் ஆசைப் படுகிறேன். எல்லா வகையான சவாலான மற்றும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்திற்கும் பொருந்தும் நடிகனாகவே இருக்க விரும்புகிறேன். என்கிறார் அர்ஜெய்.